மனித வாழ்வு பற்றிய வத்திக்கான் ஏடு மனித வாழ்வை பாதுகாப்பதாக இருக்கின்றது- திருப்பீடப்
பேச்சாளர்
டிச.13,2008. மனித வாழ்வு பற்றிய வத்திக்கான் ஏடு இதை இதைச் செய்யாதே என்ற பட்டியலைக்
கொண்டிருப்பது அல்ல, மாறாக மனித வாழ்வை பாதுகாப்பதாக இருக்கின்றது என்று திருப்பீடப்
பேச்சாளர் இயேசு சபை அருட்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி கருத்து தெரிவித்தார்.
திருப்பீட
விசுவாச கோட்பாட்டு பேராயம் வெளியிட்ட திக்னித்தாஸ் பெர்சோனே என்ற ஏடு பற்றிப் பேசிய
அவர், இதனை மேலெழுந்தவாரியாக வாசித்தால் நிறையத் தடைகளின் தொகுப்பு மாதிரியான கணிப்பைத்
தரலாம், ஆனால் இது அப்படியல்ல என்றார்.
திருமணத்தின் மாண்பு, வாழ்வைக் கொடுக்க
வேண்டிய தாம்பத்திய வாழ்வு, வயதுவந்த திசுக்கள் பற்றிய பரிசோதனை, அதனை மருத்துவத்திற்குப்
பயன்படுத்தல் போன்றவை பற்றிய நேர்மறைக் கூறுகளை இவ்வேடு எடுத்துரைக்கின்றது என்றும் அருட்தந்தை
லொம்பார்தி கூறினார்.
மனித வாழ்வைத் தவறாகப் பயன்படுத்தும் ஆபத்தை எதிர் நோக்கும்
இன்றைய உலகுக்கு இவ்வேடு நமபிக்கை தருவதாக இருக்கின்றது என்றும் அவர் தெரிவித்தார்