2008-12-12 16:34:02

முழு கிறிஸ்தவ ஒன்றிப்புக்கு இறையியல் உரையாடல் அவசியம் - திருத்தந்தை 16ம் பெனடிக்ட்


12டிச.,2008. முழு கிறிஸ்தவ ஒன்றிப்பை மீண்டும் ஏற்படுத்துவதற்கு இறையியல் உரையாடல் அவசியம் என்று திருப்பீட கிறிஸ்தவ ஒன்றிப்பு அவை நடத்திய ஆண்டுக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

எண்பது பிரதிநிதிகளை இன்று வத்திக்கானின் கிளமெண்ட்டைன் அறையில் சந்தித்து உரையாற்றிய அவர், இக்கருத்தரங்கு நடத்தப்பட்ட, கிறிஸ்தவ ஒன்றிப்பு உரையாடலை வரவேற்பதும் அதன் எதிர் காலமும் என்ற தலைப்பில் தனது சிந்தனைகளை வழங்கினார்.

நாம் எதிர்நோக்கும் முழு கிறிஸ்தவ ஒன்றிப்பை மீண்டும் ஏற்படுத்துவதற்கு இறையியல் உரையாடல் அவசியம் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என்ற அவர், எனவே இது ஊக்குவிக்கப்பட்டு வளர்க்கப்பட வேண்டும் என்றார்.

இவ்வுரையாடலில் மேய்ப்பர்கள் மட்டுமின்றி இறைமக்கள் அனைவரும் ஈடுபடுமாறும் அவர் வலியுறுத்தினார்.

 








All the contents on this site are copyrighted ©.