2008-12-11 19:30:54

கிறிஸ்துவர்களுக்குப் பாதுகாப்பு உள்துறை அமைச்சர் சிதம்பரம்.11,நவம்பர் .


கிறிஸ்துமஸ் விழாக்காலத்தில் ஒரிசாவில் கிறிஸ்தவர்கள் தாக்கப்படுவார்கள் என்று அஞ்சப்படுகிறது. மத்திய அரசு கிறிஸ்தவர்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்கும் என உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார் . கிறிஸ்துமஸ் விழா சமயத்தில் போராட்டம் நடத்தப்போவதாக சில தீவிரவாத அமைப்புக்கள் தெரிவித்துள்ளதை அடுத்து , டெல்லியின் பேராயர் வின்செண்ட் கொன்செஸ்ஸாவோ சில பிரதிநிதிகளோடு உள்துறை அமைச்சரை இவ்வாரம் புதனன்று சந்தித்து விழாக்காலத்தில் நடக்க உள்ள வன்முறைகள் பற்றித் தெரிவித்தார் . சங் பரிவார் அமைப்பு தொடர்ந்து நடத்திய வன்முறை காரணமாக ஒரிசாவி்ல் 40 பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டார்கள் . கிறிஸ்தவர்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்கத் தேவையான ஏற்பாடுகளை ஒரிசா அரசு எடுப்பதற்கு மத்திய அரசு உத்திரவிட்டுள்ளதாக ப.சிதம்பரம் கூறியதாக இந்திய ஆயர்கள் குழுவின் பிரதிநிதி பாபு ஜோசப் தெரிவித்துள்ளார் . கிறிஸ்தவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பு எனவும் , இதற்கு முன்னரும் மைய அரசு பாதுகாப்புக்கொடுக்குமாறு ஒரிசா அரசிடம் கூறியிருந்ததாகவும் சிதம்பரம் தெரிவித்ததாக பாபு ஜோசப் அறிவித்துள்ளார் .








All the contents on this site are copyrighted ©.