வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருத்தந்தையின் செபம் 081208.
இவ்வாரம் ஞாயிறு அன்று திருத்தந்தை வத்திக்கானின் தூய பேதுரு பசிலிக்கா வளாகத்தில் மூவேளை
செபத்தின்போது தெற்கு பிரேசில் நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்காக
சிறப்பாகச் செபித்தார் திருத்தந்தை.பிரேசிலின் சாங்தா கத்தரீனா மாநிலத்தில் பெரும் வெள்ளத்தின்
பாதிப்பால் பல்லாயிரம் பேர் தங்கள் வீடுகளை இழந்தனர் . இந்த நெருக்கடியான வேளையில் பாதிக்கப்பட்டோருக்கும்
, அவர்களுக்கு உதவியவர்களுக்கும் பிரேசில் நாட்டு மக்களுக்கும் எல்லாம் வல்ல இறைவனின்
பாதுகாப்பையும் அருளையும் வேண்டி மன்றாடினார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட்.