இவ்வார மூவேளை செபத்தின் போது திருத்தந்தை சென்ற வியாழன் அன்று காலமாகிய மாஸ்கோவின் பிதாப்பிதா
2 ஆம் அலெக்சியின் மரணத்துக்கு அனுதாபம் தெரிவித்து ஆர்த்தோடாக்ஸ் திருச்சபையின் இறைமக்களோடு
சேர்ந்து இறந்த பிதாப்பிதாவின் ஆன்ம சாந்திக்காக செபிப்போம் எனக் கூறி மன்றாடினார். திருவருகைக்காலம்
இவ்வுலக எதிர்பார்ப்புக்களைவிட , அரசியல் விடுதலைக்கும் மேலாக, கிறிஸ்து நமக்கு அருளியுள்ள
வரங்களில் நமக்கு நம்பிக்கையூட்டுவதாகக் கூறினார் . அன்னை மரியாவின் அமல உற்பவம் அவர்
பணிவோடு புதிய இஸ்ராயேலின் முழு விடுதலை பெற்றவராகத் திகழ்வதாகத் தெரிவித்தார். அவரது
பாதுகாப்பில் நாம் எதிர்பார்க்கும் அமைதியையும் உலகின் மீட்பையும் ஒப்படைப்போம் என்றார்
திருத்தந்தை.