2008-12-08 20:54:29

திருத்தந்தையின் ஞாயிறு மூவேளை செபம் .081208.


இவ்வார மூவேளை செபத்தின் போது திருத்தந்தை சென்ற வியாழன் அன்று காலமாகிய மாஸ்கோவின் பிதாப்பிதா 2 ஆம் அலெக்சியின் மரணத்துக்கு அனுதாபம் தெரிவித்து ஆர்த்தோடாக்ஸ் திருச்சபையின் இறைமக்களோடு சேர்ந்து இறந்த பிதாப்பிதாவின் ஆன்ம சாந்திக்காக செபிப்போம் எனக் கூறி மன்றாடினார். திருவருகைக்காலம் இவ்வுலக எதிர்பார்ப்புக்களைவிட , அரசியல் விடுதலைக்கும் மேலாக, கிறிஸ்து நமக்கு அருளியுள்ள வரங்களில் நமக்கு நம்பிக்கையூட்டுவதாகக் கூறினார் . அன்னை மரியாவின் அமல உற்பவம் அவர் பணிவோடு புதிய இஸ்ராயேலின் முழு விடுதலை பெற்றவராகத் திகழ்வதாகத் தெரிவித்தார். அவரது பாதுகாப்பில் நாம் எதிர்பார்க்கும் அமைதியையும் உலகின் மீட்பையும் ஒப்படைப்போம் என்றார் திருத்தந்தை.








All the contents on this site are copyrighted ©.