2008-12-06 16:17:29

புனிதர் மற்றும் முத்தி பெற்ற நிலைக்கு உயர்த்துவதற்கென அருளாளர்கள் மற்றும் இறையடியார்களின் பெயர்கள் திருத்தநதையிடம் சமர்ப்பிக்கப்பட்டன


டிச.06,2008. புனிதர் மற்றும் முத்தி பெற்ற நிலைக்கு உயர்த்துவதற்கென ஆறு அருளாளர்கள் மற்றும் மூன்று இறையடியார்களின் பெயர்களை திருத்தநதை 16ம் பெனடிக்டிடம் இன்று சமர்ப்பித்தார் பேராயர் ஆஞ்சலோ அமாத்தோ.

புனிதர் நிலைக்கு உயர்த்துவதற்கானத் திருப்பீடப் பேராயத் தலைவர் பேராயர் ஆஞ்சலோ அமாத்தோ இன்று வத்திக்கானில் திருத்தநதையைச் சந்தித்து இவ்வருளாளர்கள் மற்றும் இறையடியார்கள் பற்றிய விபரங்களைக் கொடுத்தார்.

அருளாளர்கள் பேராயர் சிஜிமோந்தோ பெலிச்சே பெலின்ஸ்கி, குரு ஆர்காஞ்சலோ ததினி, குரு பிரான்சிஸ்கோகுய்டார்ட், டிராபிஸ்ட் துறவி இரபேயேலே அர்னாய்ஸ் பாரோன், அருட்சகோதரி திருச்சிலுவையின் மரியா, அருட்சகோதரி கத்ரீனா வோல்பிசெல்லி ஆகியோரின் பரிந்துரைகளால் நடைபெற்ற புதுமைகள் பற்றிய விபரங்களைப் பேராயர் அமாத்தோ திருத்தநதையிடம் வழங்கினார்.

இன்னும் இறையடியார்கள் குரு ஜசிந்தோ பியான்க்கி, அருட்சகோதரர் ஆன்டெரியா வான் டென் போயெர், அருட்சகோதரி மபரிய கியாரா ஆகியோரின் வீரத்துவமான பண்புகள் நிறைந்த வாழ்வு பற்றிய அறிக்கையையும் பேராயர் அமாத்தோ திருத்தநதையிடம் இன்று சமர்ப்பித்தார்







All the contents on this site are copyrighted ©.