திருத்தந்தையின் இயேசுக்கிறிஸ்து பற்றிய நூல் இரஷ்ய மொழியில் மொழியாக்கப்பட்டுள்ளது .
05 நவம்பர், 08 .
வாழ்க்கையில் மிக முக்கியமானவைகள் பற்றி ஞானியின் கருத்துக்கள் என்ற தலைப்பில் திருத்தந்தை
முன்னர் எழுதிய இயேசுக்கிறிஸ்து பற்றிய நூல் வெளியிடப்பட்டுள்ளது . இந்த வாரம் செவ்வாய்க்கிழமை
மாஸ்கோவில், முதல் அச்சில் 20 ஆயிரம் பிரதிகள் விநியோகத்துக்கு வந்துள்ளன . நூலை வெளியிட்ட
மாஸ்கோவின் பேராயர் பவுலோ பெட்சி இயேசுக்கிறிஸ்துவைப் பற்றி எண்ணிலடங்காத நூற்கள் வெளிவந்தாலும்
திருத்தந்தை எழுதியுள்ள இந்நூல் பல்வேறு காரணங்களுக்காக மிகச் சிறந்த நூல் எனக் கூறினார்
. இந்நூலின் ஆசிரியர் இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் மிகப்பெரிய இறையியல் சிந்தனையாளர்
என்பதோடு அகில உலகத் திருச்சபையின் தலைவராக இருக்கிறார் . ஆனால் அவர் இந்நூலை திருச்சபைத்தலைவராக
அல்ல , ஆனால் இறைப்பற்றுள்ள இறையியலார் என்ற முறையில் எழுதியுள்ளார் எனப் பேராயர் கூறினார்
. இந்நூலில் அவரது அடக்கத்தையும் துணிவையும் காண்கிறோம் எனப் பேராயர் கூறினார் . கடவுளை
மறக்கும் இன்றைய உலகுக்கு இந்நூல் ஒரு வரப்பிரசாதம் எனப் பேராயர் புகழாரம் சாற்றினார்
.