திறமைகளைவிட மனித குலமே அதிக முக்கியத்துவம் வாய்ந்தது
எனக்கூறுகிறார் பேராயர்
சில்வானோ தோமாசி . 041208
ஐ.நா சபையின் ஜெனிவாவில் உள்ள அலுவலகத்தில் வத்திக்கான் திருப்பீடத்துக்கான நிரந்தர உறுப்பினர்
பேராயர் தோமாசி . இந்த வாரம் செவ்வாய்க்கிழமையிலிருந்து வெள்ளிவரை கல்வி பற்றிய கருத்தரங்கு
அங்கு நடைபெற்றுவருகிறது .
அங்கு உரை நிகழ்த்திய பேராயர் சில்வானோ தோமாசி வருங்காலத்தில்
சமாதானமாக வாழ்வதற்குக் கல்வி ஒன்றே வழியாகும் என்றார் . ஒருவர் மற்றவரைப் போற்றி மதித்தல்
, பல்வேறு கலாச்சாரங்கள் , மரபுகளின் செல்வங்களைப் பகிர்ந்து கொள்ளுதல் ஆகியன கல்வியாலேயே
வருகிறது என மொழிந்தார் . அப்படிப்பட்ட கல்வி எல்லா மனிதருடைய தேவைகளையும் கருத்தில்
கொள்வதாகக் கூறியுள்ளார் . ஏழைகள் , சமுதாயத்தில் பாதிப்புக்குகளுக்குள்ளாகும் நிலையில்
உள்ளோர் , உடலில் குறைபாடுகள் உள்ளோர் , கிராமப்புற மக்கள், நகர்ப்புறச் சேரிகளில் வாழ்வோர்
, இளையோர் , என வேறுபாடு இல்லாது அனைவரையும் கவனத்தில் கொள்வதாகக் கூறினார் . திருப்பீடப்
பிரதிநிதி பேராயர் சில்வானோ தோமாசி மனித உரிமைகளைச் சட்டமாக்கிய 60 ஆம் ஆண்டை நிறைவு
செய்யும் ஐ.நா சபை அனைவரும் கல்வி பெற உள்ள உரிமையைக் கருத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்
.