2008-12-03 14:20:18

மீரட் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் அருட்பணியாளர் பிரான்சிஸ் கலிஸ்ட்


03டிச.2008. இந்தியாவின் மீரட் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக அம்மறைமாவட்ட அருட்பணியாளர் பிரான்சிஸ் கலிஸ்டை இன்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் நியமித்தார்.

கோட்டாறு மறைமாவட்டத்தின் ராதாபுரம் எனும் ஊரில் 1957ஆம் ஆண்டு பிறந்த புதிய ஆயர், மீரட் மறைமாவட்டத்தில் இணைந்து சர்தானா இளம் குருமடத்திலும் ராஞ்சி உயர் குருமடத்திலும் கல்வி பயின்று 1982ம் ஆண்டு குருவாகத் திருநிலைபடுத்தப்பட்டார்.

1982ஆம் ஆண்டு முதல் 1999ஆம் ஆண்டு வரை ஐந்து பங்குத் தலங்களில் பணியாற்றிய பின்னர் 1999 முதல் 2002 வரை சர்தானா புனித ஜான் இளம் குருமடத்திலும் 2002 முதல் இன்று வரை ஆக்ரா உயர் குருமடத்திலும் அதிபராகப் பணியாற்றியுள்ளார்.

மீரட் மறைமாவட்டத்தின் தற்போதைய ஆயர் பாட்ரிக் நாயர் ஓய்வு பெற்றுள்ளதைத் தொடர்ந்து அருட்பணியாளர் பிரான்சிஸ் கலிஸ்டை புதிய ஆயராக திருத்தந்தை அறிவித்துள்ளார்.








All the contents on this site are copyrighted ©.