2008-12-03 14:21:02

புனித பூமிப் பகுதியில் அமைதியை நிலை நாட்டுவதற்கு ஒபாமா தன் ஆட்சியில் முக்கியத்துவம் வழங்க வேண்டும் - அமெரிக்க ஐக்கிய குடியரசு ஆயர்கள்


03டிச.2008. புனித பூமிப் பகுதியில் அமைதியை நிலை நாட்டுவதற்குத் தன் ஆட்சியில் முக்கியத்துவம் வழங்க வேண்டுமென அமெரிக்க ஐக்கிய குடியரசு ஆயர்கள் புதிய அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள பாரக் ஒபாமாவிடம் விண்ணப்பித்துள்ளனர்.

பாதுகாப்பான ஓர் இஸ்ராயேலுக்கு அருகாமையில் ஓர் உண்மையான பாலஸ்தீனிய நாடும் அமைவதற்கு வேண்டிய சூழலை உருவாக்குவதற்கு ஒபாமா அரசு உதவ வேண்டுமென அமெரிக்க ஆயர்களின் சர்வதேச நீதி மற்றும் அமைதி அவைத் தலைவர் ஆயர் ஹவ்வார்டு ஹூபார்டு குறிப்பிட்டார்.

அமெரிக்க ஐக்கிய குடியரசு ஆயர்களின் இக்கருத்தைக் கொண்ட கடிதம் இத்திங்களன்று ஒபாமாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது







All the contents on this site are copyrighted ©.