2008-12-02 14:55:04

சீனா, இந்தியா போன்ற நாடுகளில் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது - ஐ.நா.அறிக்கை


டிச.02,2008. உலகில், குறிப்பாக சீனா, இந்தியா போன்ற நாடுகளில் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக 2009ம் ஆண்டுக்கான உலகப் பொருளாதார நிலைமை பற்றிய ஐ.நா. அறிக்கை உரைத்தது.

உலகப் பொருளாதார வளர்ச்சி இவ்வாண்டிலுள்ள 2.5 விழுக்காட்டிலிருந்து 2009லம் ஆண்டில் ஒரு விழுக்காடாகக் குறையும் என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.

ஏறத்தாழ 82 கோடியே 70 இலட்சம் இந்தியரும் ஏறத்தாழ 47 கோடி சீனரும் ஒரு நாளைக்கு இரண்டு அமெரிக்க டாலருக்குக் குறைவாகவே சமபாதிக்கின்றனர்.

இந்தியாவில் ஐந்து வயதுக்குட்பட்ட சிறாரில் நாற்பது விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் குறைவான எடையுடன் உள்ளனர். இந்நாடுகளில் வளர்ச்சி அதிகரித்தாலும் ஏழை பணக்காரர் இடைவெளி அதிகரிப்பதாகக் கூற்ப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.