அந்நேரத்தில் இயேசு தூய ஆவியால் பேருவகையடைந்து, ' தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும்
ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்து,
குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர் என்றார். இறையாட்சி பணியை முடித்துத் திரும்பிய சீடர்கள்
இயேசுவிடம் வந்து, அவர் பெயரைச் சொன்னதும் சாத்தான்கூட அவர்களுக்கு அடிபணிந்ததாகச் சொல்லி
மகிழ்ந்தார்கள். இயேசுவின் பெயருக்கு இருக்கும் ஆற்றலை அறிந்து ஆனந்தமடைந்தனர். ஆம்.
இயேசுவின் வல்லமையை இந்தக் குழந்தை உள்ளம் கொண்ட சீடர்களே புகழ்ந்தனர். ஆனால் அறிவிற்
சிறந்த மறைநூல் அறிஞர்களாலும் பரிசேயர்களாலும் பாராட்ட முடியவில்லை. ஏனெனில் அறிவுக்
கர்வம் அவர்கள் கண்களைக் குருடாக்கி வைத்திருந்தது. அன்பர்களே, குழந்தை உள்ளம் மட்டுமே
அதிசயிக்கும் மற்றும் வியப்படையும் தன்மை கொண்டது. நம் வாழ்க்கையில் நாம் மகிழ்ச்சியாக
இருக்க விரும்பினால் குழந்தை உள்ளத்தின் ஒரு பண்பாகிய வியப்புறும் தன்மையைக் கொண்டிருக்க
வேண்டும்.