பசியை போக்குவதற்கான நடவடிக்கைகளில் மனிதத் தேவைகள் புறக்கணிக்கப்படுகின்றன – திருப்பீடம்
நவ.29,2008. உலகில் பசியை போக்குவதற்கான நடவடிக்கைகளில் மனிதத் தேவைகளுக்கு எப்பொழுதும்
முதலிடம் கொடுக்கப்படாததால் அவைத் தோல்வியையே தழுவுகின்றன என்று திருப்பீடப் பிரதிநிதி
ஒருவர் குறை கூறினார்.
உரோமை மையமாகக் கொண்ட ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை
நிறுவனம் நடத்திய 35வது சிறப்புக் கூட்டத்தில் பேசிய, அந்நிறுவனத்திற்கான திருப்பீடத்தின்
நிரந்தரப் பார்வையாளர் பேரருட்திரு ரெனாத்தோ வொலான்த்தே, தனிமனிதனின் தேவைகளுக்கு முன்னுரிமை
கொடுக்கப்படுமாறு கேட்டுக் கொண்டார்.
வெப்பநிலை மாற்றத்தினால் ஏற்படும் வெள்ளம்,
தரிசு நிலங்களின் அதிகரிப்பு போன்வற்றால் பாதிக்கப்பட்டுள்ள கிராமங்களின் எதிர்காலம்
பாதுகாக்கப்பட வேண்டும் மற்றும் வேளாண்மைத் துறையில் வளர்ந்து வரும் புதிய தொழிற்நுட்பம்,
உணவு வியாபாரம் போன்றவை முன்வைக்கும் சவால்களையும் ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம்
கவனத்தில் கொள்ள வேண்டும் என்று பேரருட்திரு வொலான்த்தே வலியுறுத்தினார்