சிந்தனைக்கு - திருத்தூதர் அந்திரேயா விழா . நாள் நவம்பர் 30 . இவ்வாண்டு ஞாயிற்று தினத்தில்
வருவதால் கொண்டாட்டம் இல்லை .
திருத்தூதர் அந்திரேயா . அந்திரேயா என்ற சொல்லுக்கு வீர மனிதன் என்பது பொருள் . இவர்
திருத்தூதர் பேதுருவின் மூத்த சகோதரர். துருக்கி நாட்டில் மறைபரப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்
. பின்னர் மாசிடோனியா ,கிரீஸ் நாடுகளுக்குச் சென்றார் . நீரோவின் கொடுங்கோல் ஆட்சியில்
சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார் . இவர் அறையப்பட்ட சிலுவையை நோக்கி இதற்கு முன் என்
ஆண்டவரை நீ சுமந்தாய் . மகிழ்ச்சியுடன் என்னையும் ஏற்றுக்கொள் என்று கூறித் தயங்காது
சிலுவையில் மரித்திருக்கிறார் . இவர் ரஷ்யா , போலந்து நாடுகளுக்குப் பாதுகாவலர் .