வத்திக்கான் செய்தித் தொடர்பாளர் மும்பை வன்முறை நிகழ்ச்சிக்கு வருத்தம் தெரிவிக்கிறார்
. 27,நவம்பர்,08.
மும்பையில் நிகழ்ந்துள்ள வன்முறைச் செயல்களுக்கு வத்திக்கான் திருப்பீடம் தமது அநுதாபத்தைத்
தெரிவித்துள்ளது . இது பற்றிக் கூறிய வத்திக்கான் செய்தித் தொடர்பாளர் இயேசு சபையின்
அருள்திரு பெடரிக்கோ லொம்பார்டி நடந்திருக்கும் வன்முறை மிகவும் மோசமானதென்றும் , இந்நிகழ்ச்சி
அகில உலகையும் வருத்தத்துக்குள்ளாக்கியிருக்கிறதென்றும் இத்தாலியின் அன்சா என்ற செய்தி
நிறுவனம் வழியாகத் தெரிவித்துள்ளார் .