திருத்தந்தையின் புண்ணிய பூமியின் திருப்பயணம் , 27,நவம்பர் ,08.
திருத்தந்தையின் புண்ணிய பூமியின் திருப்பயணம் பற்றி இஸ்ராயேலின் செய்தித்தாள் ஹாரெட்ஸ்
வெளியிட்ட செய்தியில் திருத்தந்தை அந்நாட்டுக்கு அடுத்த ஆண்டு மே மாதம் செல்லவிருப்பதாகக்
கூறியுள்ளது . இது பற்றிக்கூறிய வத்திக்கானின் செய்தித் தொடர்பாளர் அருள்தந்தை பெடரிக்கோ
லொம்பார்டி திருத்தந்தை புனித பூமிக்குச் செல்லும் சாத்தியம் பற்றி தூதரங்கள் தொடர்பு
கொண்டிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார் .