திருத்தந்தையின் சமயச் சிந்தனைகளைப் பாராட்டுகிறார் உரோம் மாநகர யூத மதகுரு . 27,நவம்பர்,08.
திருத்தந்தை இவ்வார புதன் மறைபோதகத்தில் சமயக் கலந்துரையாடல் பற்றிச் சில கருத்துக்களைப்
பகிர்ந்து கொண்டார். கலந்துரையாடலின் போது அடிப்படைக் கொள்கைகளைப் பற்றி விவாதிக்க முடியாது
, மதங்களின் அடிப்படைப் போதனைகளால் சமுதாயத்தில் உண்டாகும் கலாச்சாரத் தாக்கம் பற்றிக்
கலந்து பேசலாம் என்றார் திருத்தந்தை . இது சாத்தியமானது ,மற்றும் அடிப்படையானது எனவும்
திருத்தந்தை கூறியிருந்தார் .இதுபற்றிக் கூறிய ராபி ரிக்கார்டோ செணி, சமயங்கள் ஒரு குறிப்பிட்ட
எல்லைக்கு மேல் கலந்துபேச இயலாது என்றும் , சமயக்கலந்துரையாடல் அரசியல் சமரசப்பேச்சு
அல்ல . இங்கு சமயத்தத்துவங்களும் கோட்பாடுகளும் விட்டுக் கொடுக்க முடியாதவை எனவும் கூறினார்
.