மரண தண்டனை கைதியின் தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்படுமாறு வாஷிங்டன் மாநில கத்தோலிக்க
ஆயர்கள் வலியுறுத்தல்
நவ.26.,2008, அமெரிக்க ஐக்கிய நாட்டில் மரண தண்டனை நிறைவேற்றப்பட காத்திருக்கும் டரோல்டு
ஸ்டென்சன் என்பவரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுமாறு வாஷிங்டன் மாநில கத்தோலிக்க
ஆயர்கள் ஆளுனர் கிறிஸ்டின் கிரேகுவாயிரைக் கேட்டுள்ளனர்.
55 வயதாகும் ஸ்டென்சன்,
1993ம் ஆண்டில் அவரது மனைவி மற்றும் தொழில் பங்குதாரரைச் சுட்டுக் கொன்றதாகக் குற்றம்
சாட்டப்பட்டவர். வருகிற டிசம்பர் 3ம் தேதி லீதல் ஊசி ஏற்றி கொல்லப்படவிருக்கிறார்.
ஸ்டென்சனின்
குற்றங்களால் துன்புறுவோருக்காகத் தாங்கள் தொடர்ந்து செபிக்கும் வேளை, கடவுளின் நீதியையும்
மன்னிப்பையும் மதித்து, பொது மக்களின் பாதுகாப்பு கருதி அவரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக
மாற்றுமாறு ஆயர்கள் ஆளுனருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.