அழகியலுக்கும் நன்னெறிக்கும் இடையே, உண்மைக்கும் நன்மைத்தனத்திற்குமிடையே உரையாடல் தேவை
- திருத்தந்தை
நவ.25,2008. அழகியலுக்கும் நன்னெறிக்குமிடையே, அழகுணர்ச்சிக்கும் மனிதச் செயல்களுக்குமிடையே
இருக்கும் ஆழமான உறவு நம் அன்றாட விவாதங்களில் மறக்கப்படும் வேளை, இவற்றுக்கிடையேயான
உறவுகள் பற்றிய உரையாடல் மிகவும் இன்றியமையாதது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
திருப்பீடத்
துறைகளின் 13வது பொது அமர்வில் கலந்து கொண்டவர்களுக்கு இன்று செய்தி அனுப்பிய திருத்தந்தை,
பல்வேறு நிலைகளில் அழகியலுக்கும் உண்மையைத் தேடுவதற்குமிடையே பிளவு இருப்பதை உண்மையிலே
காண முடிகின்றது என்றார்.
அழகியலின் உலகலாவிய தன்மை என்ற தலைப்பில் நடைபெற்ற இக்கூட்டம்
பற்றிப் பேசிய அவர், அழகும் உண்மையும் இறைவனில் தங்களின் நிறைவையும் இறுதி நிலையையும்
அடைகின்றன என்றும் கூறினார்.