வளர்ச்சிக்கான நிதியுதவி பற்றிய சர்வதேச கருத்தரங்கில் திருப்பீடம் பங்கெடுப்பு
நவ.24,2008. வருகிற சனிக்கிழமையன்று கத்தார் நாட்டு தோஹாவில் தொடங்கும் வளர்ச்சிக்கான
நிதியுதவி பற்றிய சர்வதேச கருத்தரங்கில் திருப்பீடம் பங்கெடுக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா.வுக்கான
திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் செலஸ்தினோ மிலியோரே திருப்பீடத்தின் சார்பில்
பங்கு கொள்ளவுள்ளார்.
192 ஐ.நா. உறுப்பு நாடுகளின் உயர்மட்ட பிரதிநிதிகள் கலந்து
கொள்ளும் இக்கருத்தரங்கில் தற்போதைய பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட வளர்ச்சிக்கான நிதியுதவி
பற்றி விவாதிக்கப்படும்.
இச்சர்வதேச கருத்தரங்கு டிசம்பர் 2ம் தேதி நிறைவுபெறும்.