2008-11-21 19:17:32

புனித குழந்தை தெரசாவின் புனிதப் பொருள் விண்ணில் உலா வந்தது .

211108.


புனித குழந்தைத் தெரசாள் கார்மேல் சபையில் நாளும் செபத் தியானத்தில் ஆழ்ந்திருந்தவர் . அவர் உலகு எங்கும் சென்று நற்செய்தியை அறிவிக்க ஆவல் கொண்டிருந்தார் . அவரைத் திருச்சபை முன்னரே, மறைபரப்புதலின் பாதுகாவலியாக அறிவித்துள்ளது . விண்வெளிக்கு இந்த ஆண்டு மே 31 லிருந்து ஜூன் 14 வரை சென்று, விண்வெளி ஓடம் டிஸ்கவரியில் விண்ணில் வலம் வந்த கலோனல் ரோன் கரான் என்பவர், அமெரிக்காவின் நியூகானி நகரிலுள்ள கார்மேல் மடத்தோடு தொடர்பு கொண்டு அவர்களைத் தமது பயணம் பாதுகாப்பாக அமைய செபிக்குமாறு கேட்டுக்கொண்டார் . அருள் சகோதரிகளிடமிருந்து விண்ணுக்கு ஏதேனும் கொண்டு செல்லத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார் . அவர்கள் கொடுத்த புனித குழந்தைத் தெரசாவின் புனிதப் பொருள் ஒன்றை விண்வெளிக்கு எடுத்துச் சென்றார் . மணிக்கு 17 ஆயிரம் மைல் வேகத்தில் 57 இலட்சம் மைல்கள் அப்புனிதப் பொருள் விண்ணில் வலம் வந்துள்ளது . புனிதை தெரசாவின் பாதுகாவலில் கார்மேல் சகோதரிகள் உலகை ஒப்படைத்துள்ளனர் .








All the contents on this site are copyrighted ©.