2008-11-21 19:48:29

இயேசு சபைத் தலைவர்-விடுதலை இறையியலுக்கு ஆதரவு .21,நவம்பர் ,08.


இயேசு சபையின் புதிய தலைவர் அருள்தந்தை அடால்போ நிக்கோலாஸ் . விடுதலை இறையியல் அதிக ஆதரவு பெறுவதில்லை என்று வருத்தம் தெரிவித்தார் . தாங்க முடியாத அநீதிகள் அரங்கேறும் இலத்தீன் அமெரிக்காவில் விடுதலை இறையியல் துணிவுமிக்க , ஆக்கப்பூர்வமான இறையியல் தத்துவம் என்றார் . இந்த விடுதலைப் புரட்சிக்கு வித்திடும் இறையியலுக்கு திருச்சபைத் தலைவர்கள் நம்பிக்கை ஓட்டுத் தரவேண்டும் எனத் தெரிவித்துள்ளார் . “எல் பீரியாடிக்கோ” என்ற இதழுக்குப் பேட்டியளித்த அருள்தந்தை அடால்போ நிக்கோலாஸ், வத்திக்கான் திருப்பீடம் , இயேசு சபையை உற்றுக் கவனிப்பது இயல்பானதே . ஏனெனில் இயேசு சபையினர் இறையியல் தத்துவத்திலும் , கொள்கைகளிலும் திருச்சபையில் மறைவில்லாத , வெளிப்படையான துறவறச் சபை எனத் தெளிவுபடுத்தினார் .








All the contents on this site are copyrighted ©.