2008-11-20 19:14:31

இந்தியா- கிறிஸ்துமஸ் விழாவை நடத்தவிடாமல் தடுக்கத் தீவிரவாதிகள் திட்டம். 20, நவம்பர்,08.


மதத்தீவிரவாதிகள் சிலர் ஒரிசாவில் கிறிஸ்துமஸ் விழாவை நடத்தவிடாமல் தடுக்கப்போவதாகக் கூறியுள்ளனர் . விஷ்வ இந்து பரிசத் கட்சியினைச் சேர்ந்த சுவாமி இலட்சுமானந்த சரஸ்வதி சென்ற ஆகஸ்ட் மாதம் கொல்லப்பட்டதற்கு கிறிஸ்தவர்களை அநீதியாக அக்கட்சி குற்றம் சாற்றி வருகிறது . ஒரிசாவை ஆளும் நவீன் பட்நாயக் அரசு குற்றவாளியைக் கண்டுபிடிக்காவிடில் அம்மாநிலம் முழுவதும் கிளர்ச்சி செய்யப்போவதாக இவர்கள் அச்சுறுத்தியுள்ளனர். இந்த எச்சரிக்கையை மாநிலத் தலைநகர் புவனேஸ்வரத்தில் நடந்த இந்துத் தீவிரவாத மாநாட்டின்போது தெரிவித்தனர் . ஏறத்தாழ 65 ஆயிரம் பேர் கொண்ட பல்வேறு இந்துத் தீவிரவாத வகுப்பினர் பல்வேறு இடங்களிலிருந்து வந்து அம்மாநாட்டில் கலந்து கொண்டதாக தெரிகிறது .








All the contents on this site are copyrighted ©.