2008-11-19 13:54:17

கந்தமாலில் கிறிஸ்தவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க அரசு உறுதி


நவ.19,2008. ஆகஸ்ட் மாதத்தில் கந்தமால் மாவட்டத்தில் நடந்த வன்முறைகளில் சேதமாக்கப்பட்டுள்ள கிறிஸ்தவ நிறுவனங்கள், கோவில்கள் மற்றும் செபக் கூடங்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கவுள்ளதாக ஒரிசா மாநில அரசு அறிவித்துள்ளது.

மதமோதல்களால் பாதிக்கப்பட்ட மதக்கட்டிடங்களுக்கு அரசு இழப்பீட்டுத் தொகை வழங்கவுள்ளது இதுவே முதன்முறையாகும்.

முழுவதுமாக சேதமாக்கப்பட்டுள்ள பெரிய கட்டிடங்களுக்கு 2 இலட்சம் ரூபாயும், சிறிய அளவில் சேதமாக்கப்பட்டுள்ள பெரிய கட்டிடங்களுக்கு 1 இலட்சமும், முற்றிலுமாக அழிவுக்குள்ளாகியுள்ள சிறிய கட்டிடங்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் சிறிய அளவில் சேதமாக்கப்பட்டுள்ள சிறிய கட்டிடங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை வழங்கவுள்ளதாக ஒரிசா அரசு அறிவித்தது.

கந்தமாலின் இருமாத அளவிலான மதமோதல்களில் பெரியதும் சிறியதுமாக 150 கட்டிடங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன.








All the contents on this site are copyrighted ©.