இலங்கையில் சர்வதேச கண்காணிப்பாளர்களும் பிறரன்புப் பணியாளர்களும் மீண்டும் அனுமதிக்கப்பட
வேண்டும் - மன்னார் ஆயர்
நவ.19,2008 போரால் பாதிக்கப்பட்ட மக்களின் துன்பங்களைக் குறைக்கவும், அவர்களுக்கான பாதுகாப்பை
உறுதி செய்யவுமான நோக்கில் சர்வதேச கண்காணிப்பாளர்களும் பிறரன்புப் பணியாளர்களும் மீண்டும்
அனுமதிக்கப்பட வேண்டும் என இலங்கை மன்னார் ஆயர் ஜோசப் இராயப்பு அழைப்புவிடுத்துள்ளார்.
வன்னிப்
பகுதியில் 5 நாள் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு திரும்பிய ஆயர் இராயப்பு உரைக்கையில்,
தற்போதைய நிலைகளை ஒத்த ஒரு துன்ப சூழலைத் தான் எப்போதும் கண்டதில்லை எனவும் கூறினார்.
வன்னிப்
பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் கண்ணிலிருந்தே அவர்கள் சோகத்தைத் தன்னால் படிக்க
முடிந்தது என்ற ஆயர், புலம் பெயர்ந்துள்ள மக்கள் உணவு மற்றும் தங்குமிடமின்றி பெரிய அளவில்
துன்பங்களை அனுபவிப்பது குறித்த ஆழ்ந்த கவலையையும் தெரிவித்தார்.