காரித்தாஸ் எய்ட்ஸ் நோயுற்ற குழந்தைகளுக்கு அதிகக் கவனம் .18,நவம்பர்,08.
வரும் டிசம்பர் மாதம் முதல் தேதி அகில உலக எய்ட்ஸ் தினம் நினைவு கூறப்படுகிறது . அகில
உலகக் காரித்தாஸின் தலைவர் கர்தினால் ஆஸ்கர் ரொட்ரீகுவஸ் மாராடீகா இம்மாதம் 17 ஆம் தேதி
வெளியிட்ட செய்தியில் உலகின் எய்ட்ஸ் நோயாளிகளில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு நோய்
தடுக்கும் மருந்துகள் இருப்பதாகக் கூறினார் . தற்பொழுது 15 விழுக்காடு குழந்தைகளே இதற்கான
மருந்தைப் பெற்றுப் பயனடைகிறார்கள் . பலர் 2 வயதுக்கு முன்னரே இறந்துவிடுவதாக கர்தினால்
மாராடீகா தெரிவித்தார் . குழந்தைகளைக் காக்க நல்ல மருந்துகளைத் தயாரிக்க நாடுகளும் ,
மருந்து தயாரிப்பாளர்களும் முன் வரவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார் கர்தினால் . 2009 ஆம்
ஆண்டில் குழந்தைகளைக் காப்பதே காரித்தாஸின் 162 மையங்களின் முன்னுரிமையாக இருக்கும் என
மேலும் கூறினார் காரித்தாஸ் தலைவர் கர்தினால் ஆஸ்கர் ரொட்ரீகுவஸ் மாராடீகா .