2008-11-17 15:40:11

கவனமாக வண்டி ஓட்டுக – திருத்தந்தை 16ம் பெனடிக்ட்


நவ.17,2008. புனித பவுல் அறிவுரை கூறுவது போல வாகன ஓட்டுனர்கள் விழிப்புணர்வோடும் நிதானத்தோடும் செயல்படுமாறு கேட்டுக் கொண்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

உலக சாலை விபத்துக்கள் தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டதை முன்னிட்டு ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் இவ்வாறு கூறிய அவர், வாகன விபத்துக்களில் இறந்தவர்களைச் சிறப்பாக நினைவுகூரும் நோக்கத்தில் இத்தினம் கடைபிடிக்கப்பட்டது என்றார்.

பொறுப்பு, கவனம், பிறரை மதித்தல் ஆகிய பண்புகள் சாலை நன்னடத்தை பண்புகள் என்றுரைத்த திருத்தந்தை, சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பாகப் பயணம் செய்ய அன்னை மரியா நம்மை வழி நடத்துவாராக என்றார்.








All the contents on this site are copyrighted ©.