வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுமாறு வேண்டுகிறார் வியட்நாம் பேராயர் . 13 , நவம்பர்
,08.
கடந்த 40 ஆண்டுகள் கண்டிராத பெரும் வெள்ளம் வியட்நாமின் ஹனாய் நகரையும் , வட பகுதியையும்
பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது . ஹனாயின் பேராயர் ஜோசப் கோகுவாங் கீட் உள்ளூர் கத்தோலிக்க
மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்குத் தாராளமாக உதவிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்
. வெள்ள நிவாரணப் பணியில் உதவி செய்யுமாறும் , வெள்ளத்தைத் தடுக்கும் பணியை மேற்கொள்ளுமாறும்
கேட்டுக்கொண்டுள்ளார் . அக்டோபர் இறுதியிலிருந்து நவம்பர் 7 தேதி வரை கொட்டிய மழை காரணமாக
84 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர் . பல கோடி டாலர்களுக்கான சொத்துக்கள் நாசமாகியுள்ளதாக
அரசு அறிவித்துள்ளது .