Home Archivio
2008-11-11 15:16:46
இலங்கையில் ஏறத்தாழ 20 இலட்சம் பேர் நீரழிவு நோயாளிகள்
நவம்.11,2008. இலங்கையில் ஏறத்தாழ 20 இலட்சம் பேர் நீரழிவு நோயால் துன்புறுகின்றனர் என்று தேசிய நீரழிவு நோய் மையம் அறிவித்தது.
தற்போது 8.4 விழுக்காட்டினர் நீரழிவு நோயாளிகள். இந்நிலை 2025ல் 10.7விழுக்காடாக உயரும் என்றும் அம்மையம் அறிவித்தது.
உணவுப் பழக்கவழக்கம், உடம்பு பெருத்தல், மனப்பதட்டம், உடற்பயிற்சியின்மை போன்றவை நீரழிவு நோய்க்கு முக்கிய காரணங்கள் அம்மையம் கூறியது.
நவம்பர் 14ம் தேதி உலக நீரழிவு நோய் தினம் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு அம்மையத் தலைவர் மகென் விஜேசூரியா இத்தகவலை தெரிவித்தார்.
All the contents on this site are copyrighted ©.