2008-11-11 15:12:08

இந்திய தேசிய கத்தோலிக்க குருக்கள் அவை மூத்த குருக்களைக் கவுரவிக்கின்றது


நவம்.11,2008. தங்களது வாழ்நாளில் அசாதாரணப் பணியாற்றிய 15 மறைமாவட்ட மூத்த குருக்களுக்கு விருது வழங்கி கவுரவிப்பதற்கு முதன்முறையாகத் தீர்மானித்துள்ளது இந்திய தேசிய கத்தோலிக்க குருக்கள் அவை.

இவ்வவையின் இத்தீர்மானத்தின்படி, பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிந்த 15 குருக்களுக்கு வருகிற டிசம்பர் 3,4 தேதிகளில் மும்பைக்கு அருகிலுள்ள கொரேகாவுன் புனித பயஸ் கல்லூரியில் நடக்கும் கூட்டத்தில் விருதுகள் வழங்கப்படும்.

தமிழகத்தின் கோட்டாறு மறைமாவட்ட குரு என்.ஜே.எட்வின் உட்பட பல மாநிலங்களின் 15 மறைமாவட்ட குருக்கள் இவ்விருதுகளைப் பெறுவர்.

இந்திய தேசிய கத்தோலிக்க குருக்கள் அவை திருச்சபை சட்டத்திற்கு ஒத்தவகையில் 1987 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது







All the contents on this site are copyrighted ©.