வத்திக்கான் இஸ்ராயேல் பிரதிநிதிகளின் பொருளாதாரம் பற்றிய சந்திப்பு 10நவ.08
இம்மாதம் 6 ஆம் தேதி எருசலேத்தில் நடைபெற்ற பொருளாதாரம் பற்றிய இரு தரப்பினரின் பேச்சு
வார்த்தை மகிழ்ச்சி அளித்ததென வத்திக்கான் பிரதிநிதி கூறியுள்ளார். இம்மாதம் 10 ஆம்
தேதி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த வத்திக்கான் குழுவின் செயலர் தந்தை ஜொவான்னி
காபுத்தா கூறுகையில் இஸ்ராயேல் அரசு வரி வசூல் செய்வது பற்றியும் ,இஸ்ராயேலில் உள்ள வத்திக்கானுக்குச்
சொந்தமான உடைமைகள் பற்றியும் சுமுகமான முறையில் கலந்து பேசியதாகத் தெரிவித்தார் . பொருளாதாரம்
பற்றித் தொடர்ந்து பேச்சு வார்த்தைகள் நடைபெறும் என அவர் மேலும் தெரிவித்தார் . அடுத்த
சந்திப்பு டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி நடக்க உள்ளதாகவும், அதில் வத்திக்கான் நேருதவிச்
செயலர் மேதகு பியத்ரோ பரோலினும் கலந்து கொள்ள உள்ளதாகவும் தந்தை ஜொவான்னி காபுத்தா தெரிவித்தார்
.