ஒரிசாப் பேராயருக்கு கொலை மிரட்டல். 10 நவம்பர் 2008 .
ஒரிசாவின் பேராயர் இரபேல் சீனத் அவர்களுக்குக் கொலை மிரட்டல் வந்துள்ளதாக ஆயர் தெரிவித்துள்ளார்
. ஒரிசாவில் சென்ற ஆகஸ்ட் மாதம் ஒரு இந்துத் தீவிரவாதத் தலைவர் கொல்லப்பட்ட பிறகு பேராயர்
கொலை மிரட்டல் மடல் ஒன்றைப் பெற்றதாகத் தெரிவித்தார் . அத்தீவிரவாதியைக் கொன்றதாகப் பின்னர்
இந்தியாவின் மாவோ கிளர்ச்சியாளர்கள் தெரிவித்தார்கள் . ஆனால் இதற்குக் கிறிஸ்தவர்களே
காரணம் எனப் பொய்க்குற்றம் சாற்றப்பட்டு தாக்கப்பட்டார்கள் . வன்முறைகளை அடக்குவதற்கு
அரசியலார் தவறியாத அடிக்கடி அரசைக் கண்டித்து வந்தார் பேராயர் . சமீபத்தில் ஒரு அரசு
அதிகாரியோடு நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின் அவருக்கு வந்த கொலை மிரட்டல் பற்றி பேராயர்
சீனத் தெரிவித்தார் .