2008-11-09 18:57:24

ஹயிட்டி நாட்டில் விபத்தில் மரணம் அடைந்தவர்களுக்குத் திருத்தந்தை அனுதாபம். 09 ,நவம்பர் ,08.


ஹயிட்டி நாட்டின் பெஷன் வில் என்ற இடத்தில் பள்ளிக் கட்டடம் ஒன்று நொறுங்கி விழுந்தது . 82 பேருக்கும் அதிகமான குழந்தைகள் இறந்துள்ளனர். 100 பேருக்கும் அதிகமானோர் காயப்பட்டுள்ளனர் . திருத்தந்தை துயருறுவோரோடு இணைந்து , இந்தத் துயர நிகழ்ச்சியால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தமது அனுதாபத்தைத் தெரிவித்துள்ளார் . ஆண்டவர் இறந்த குழந்தைகளையும் , இறந்த மற்றவர்களையும் , அவரது அரசின் அமைதியில் இளைப்பாறச் செய்யுமாறும் , காயப்பட்டோருக்கு ஆறுதல் அளிக்குமாறும் செபிப்பதாகத் திருத்தந்தை தெரிவித்ததாக அவரது வத்திக்கான் செயலர் கர்தினால் தார்சீசியோ பெர்த்தோனே தந்திவழி செய்தி அனுப்பியுள்ளார் . பாதிக்கப்பட்ட அனைவருக்கும் திருத்தந்தை தமது ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்துள்ளார் . மீட்புப் பணியில் உள்ளோரின் செயலைக் கருத்தில் கொண்டுள்ள திருத்தந்தை , ஆன்மீக ஆறுதல் அளிக்கும் முகத்தான் தமது அப்போஸ்தலிக்க ஆசியை விபத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வழங்கியுள்ளார் எனக் கர்தினால் பெர்த்தோனே தெரிவித்துள்ளார்.








All the contents on this site are copyrighted ©.