2008-11-09 19:39:41

எருசலேத்தின் புனித ஆலயத்தில் துறவிகள் சண்டை .09,நவம்பர் .08 .


கிரேக்க ஆர்த்தோடாக்ஸ் துறவியரும், ஆர்மீனியக் கிறிஸ்தவ சபைத் துறவியரும் கிறிஸ்து சிலுவையில் ஏற்றப்பட்டதாகக் கூறப்படும் இடத்தில் உள்ள புனித கல்லறை தேவாலயத்தில் இந்த ஞாயிறு, பலமாகத் தாக்கிக்கொண்டு சண்டையிட்டுள்ளனர் . ஆர்மீனியத் துறவியர் கிறிஸ்துவின் புனித சிலுவை விழாவுக்குத் தயாரித்துக் கொண்டிருந்தபோது இது நிகழ்ந்துள்ளது . அக்கோவிலில் இருந்த அலங்காரங்களும் , திரைச் சீலைகளும் இழுத்துப் போடப்பட்டதாகத் தகவல் தெரிவிக்கிறது . கிரேக்க ஆர்த்தோடாக்ஸ் சபையினர் இயேசுவின் கல்லறை இருக்கும் இடத்துக்குள் செல்ல முயன்றதாகக் கூறி , இது சட்டத்துக்குப் புறம்பானது என ஆர்மீனியக் கிறிஸ்தவர்கள் கூறி வன்முறையில் இறங்கியதாகக் கூறப்படுகிறது . காவலர்கள் வரவழைக்கப்பட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர் .








All the contents on this site are copyrighted ©.