2008-11-08 20:39:14

கத்தோலிக்க இஸ்லாமியக் கலந்துரையாடல் சிறப்பான முயற்சி என்கிறார் , தந்தை பெடரிக்கோ லொம்பார்டி . 08, நவம்பர், 08 .


பல்வேறு சமயங்களில் கத்தோலிக்க , இஸ்லாமியக் கலந்துரையாடல்கள் நடந்துதுள்ளன .ஆனால் தற்போது நடந்து முடிந்த கலந்துரையாடலில் மனம் விட்டுப் பேசி , இவர்களை இணைப்பதும் , பிரிப்பதும் எவையெவை என அலசிப்பார்த்தனர் என தந்தை லொம்பார்டி கூறியுள்ளார் . அவர்கள் இணைந்து வெளியிட்ட அறிக்கை மதச் சுதந்திரம் , மனித உரிமைகளை மதித்தல் ஆகியவற்றைத் தெளிவாகக் கூறியுள்ளது . நம்பிக்கை உணர்வோடு நடந்த கருத்தரங்கு மேலும் தொடர நல்ல வாய்ப்புக்களை வழங்கியுள்ளதாகத் தந்தை பெடரிக்கோ லொம்பார்டி கூறியுள்ளார் . தவறான எண்ணங்களைக் களைந்து நல்ல உறவுக்கு வழி வகுக்குமாறு திருத்தந்தை கூறியுள்ளதாக வத்திக்கானின் செய்தித் தொடர்பாளர் தந்தை லொம்பார்டி தெரிவித்தார் .








All the contents on this site are copyrighted ©.