2008-11-06 19:54:26

மெக்சிக்கோ நாட்டில் விமான விபத்து – அமைச்சர் மரணத்துக்கு திருத்தந்தை அனுதாபம் . 06 நவ. 08 .


மெக்சிக்கோ நாட்டில் விமான விபத்தில் காலமான நாட்டின் உள்துறைச் செயலர் திரு. கமிலோ மோரினோ டெர்ராஸோ மற்றும் அந்த விபத்தில் இறந்தவர்களுக்கும் திருத்தந்தை தமது அனுதாபத்தைத் தெரிவித்துள்ளார் . மெக்சிக்கோ நாட்டின் தலைவர் திரு. பிலிப்பே ஜீசஸ் ஹினோஜோசாவுக்கு அனுப்பிய செய்தியில் பிலிப்பே ஜீசஸுக்கும் , அவரது அரசினருக்கும் , விபத்துக் காரணமாகப் பாதிப்புக்குள்ளானவர்கள் குடும்பத்துக்கும் , நாட்டு மக்களுக்கும் திருத்தந்தை அவரது இதயமிகு வருத்தத்தையும் , தமது பாசமுள்ள உறவையும் தெரிவித்து மடல் அனுப்பியுள்ளதாக வத்திக்கான் திருப்பீடத்தின் செயலர் கர்தினால் தார்சீசியோ பெர்த்தோனே தெரிவித்தார் . திருத்தந்தையின் அனுதாபச் செய்தியுடன் தாமும் தமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிப்பதாகத் தெரிவித்துள்ளார் கர்தினால் பெர்த்தோனே .








All the contents on this site are copyrighted ©.