ஒபாமா உலகை மாற்றிவிடுவார் , பேராயர் டூட்டு .05 நவம்பர் .08
ஒபாமா தேர்வு செய்யப்பட்டால் உலகம் ஒரு புது யுகத்தைக் காணும் எனக் கூறியுள்ளார் தென்
ஆப்பிரிக்காவின் பேராயர் டெஸ்மண்ட் டூட்டு . தேர்தல் முடிவுகள் வெளிவராததற்கு முன்னர்
அவர் இவ்வாறு ஆரூடம் கூறியிருந்தார். அமெரிக்காவின் மீஷிகன் பல்கலைக்கழகத்தில் அவரது
மனிதாபிமான சேவைக்காக வாலன்பர்க் பதக்கம் வழங்கப்பட்ட நிகழ்ச்சியில் பேசும்போது அவர்
இவ்வாறு கூறினார் . கறுப்பின மக்களுக்கு வசந்த காலம் வர உள்ளது . ஒரு புது யுகம் புலரும்
எனக் கூறினார் . வெப்பநிலை மாற்றத்துக்கு அமெரிக்கா ஒத்துழைப்புத் தர மறுத்துவிட்டது
. ஈராக் போர் நடந்திருக்கக் கூடாது . புதிய அமெரிக்கத் தலைவராக ஒபாமா வரும்போது உலகின்
மற்ற பகுதிகளோடு உறவுகள் மேம்படும் என நம்பிக்கை தெரிவித்திருந்தார் .