ஒரிசாவில் இறந்த கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகம்.04.11.08.
இந்தியாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆய்வறிக்கையின்படி ஒரிசாவில் இறந்தோரின் எண்ணிக்கை
500 க்கும் அதிகமெனக் கூறப்படுகிறது . ஆகஸ்ட் மாதம் வன்முறை தொடங்கியதிலிருந்து கிறிஸ்தவர்கள்
மிக அதிக எண்ணிக்கையில் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது . அந்த மாநில அரசு 31 பேர்
மட்டுமே இறந்ததாகக் கணக்குக் காட்டியுள்ளது . இந்த இனப் படுகொலைக்குச் சார்பாக மாநில
அரசு , கண்களை மூடிக்கொண்டுள்ளது . ஒரு அதிகாரி ஆய்வாளர்களிடம் அவர் மட்டுமே 200 க்கும்
அதிகமாக இறந்தோரை எரியூட்டியதாகக் கூறியுள்ளார் .