2008-11-03 19:35:27

ஈராக்கின் கிறிஸ்தவர்களுக்கு உதவுமாறு இலண்டன் பிரதமரிடம் வேண்டுகோள் .03 நவம்பர் , 08 .


ஈராக்கில் கிறிஸ்தவர்கள் கொல்லப்படுவது நிறுத்தப்பட ஆவன செய்ய வேண்டும் எனப் பிரிட்டன் பிரதமரிடம் விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளனர் பிரிட்டனில் வாழும் ஈராக்கியர் . மோசூல் பகுதியில் கிறிஸ்தவர்கள் தாக்கப்படுவது குறித்து பிரிட்டானியக் குடிமக்களுடன் இணைந்து ஊர்வலமாகச் சென்று பிரதமர் இல்லத்தில் விண்ணப்பத்தை வழங்கிய பிரிட்டனில் வாழும் ஈராக்கியர்கள், ஈராக் கிறிஸ்தவர்களின் பாதுகாப்புக்காக ஈராக் அரசை பிரிட்டானிய அரசு வலியுறுத்த வேண்டும் என வேண்டினர் . ஈராக்கின் மோசூல் பகுதியிலிருந்து வெளியேறக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ள கிறிஸ்தவர்களுக்கு பாதுகாப்பு, மற்றும் வெளியேறியுள்ள மக்களுக்கு உதவிகள் , தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்ல விரும்பும் மக்களுக்கு வழிவகை செய்தல் போன்றவைகளுக்கும் ஈராக் அரசுடன் இணைந்து உதவுமாறு பிரிட்டன் பிரதமரிடம் விண்ணப்பித்துள்ளனர் பிரிட்டனில் வாழும் ஈராக்கியர்கள் .








All the contents on this site are copyrighted ©.