நாட்டின் குழப்பமான சூழ்நிலைபற்றிக் கலந்து பேச லெபனான் நாட்டுத் தலைவர் திருத்தந்தையைச்
சந்தித்தார் .31 அக்டோபர் ,08.
இவ்வெள்ளியன்று திருத்தந்தையை லெபனான் நாட்டுத் தலைவர் மிஷல் சிலெய்மான் சந்தித்து ,
நாட்டில் இயல்பான அரசியல் கலந்துரையாடல் நடத்தி , நாட்டில் இயல்பு நிலை திரும்புவது பற்றிக்
கலந்து பேசினார் . அந்நாட்டின் மிகச் சிறிய ஊறுபாடும் தாங்கமுடியாத நொய்மை நிலையில் உள்ள
அரசியல் பற்றியும் , மத்திய கிழக்கு நாடுகளின் நிலைமை பற்றியும் , பாலஸ்தீனப் பிரச்சனைக்கு
விரைவில் தீர்வு காண்பது பற்றியும் திருத்தந்தையும் லெபனான் நாட்டுத் தலைவரும் கலந்து
பேசினார்கள் .