2008-10-30 19:17:53

இலங்கையில் விடுதலைப் புலிகள் மின் உற்பத்தி இலக்கைத் தாக்குதல். 30 அக். 08 .


தமிழ் விடுதலைப்புலிகள், இராணுவ முகாமை விமானம் கொண்டு தாக்கியதாகச் செய்திகள் கூறுகின்றன . இச் செவ்வாய்க் கிழமை இரவு தள்ளாடியிலுள்ள இராணுவ முகாமைத் தாக்கியதில் சிலர் இறந்ததாகவும் , பலர் காயமுற்றதாகவும் இலங்கையின் குவார்டியன் செய்திச் சேவை கூறுகிறது. கெலானி திஸ்ஸாப்பகுதியில் உள்ள மின் உற்பத்தி நிலையமும் தாக்கப்பட்டதாகவும் முன் எச்சரிக்கையாக அங்கு மின் சக்தி நிறுத்தப்பட்டதால் அங்கு சிலர் காயமுற்றுள்ளனர் , வேறு பாதிப்புக்கள் இல்லை எனக் கூறப்படுகிறது . இதுபற்றிக்கூறிய சமூக சேவகி சுகலா குமாரி விடுதலைப்புலிகள் தாக்குவதாக அறிவிக்கப்பட்டதும் அங்கு மக்களிடையே உண்டான பீதி அளவு கடந்து இருந்தது . அப்படியென்றால் இலங்கையின் வடபகுதியில் நடக்கும் இராணுவத்தின் தாக்குதலால் அங்குள்ள தமிழர் படும் வேதனையைக் கணிப்பது எப்படி எனக் கேட்கிறார் .








All the contents on this site are copyrighted ©.