இலங்கையில் விடுதலைப் புலிகள் மின் உற்பத்தி இலக்கைத் தாக்குதல். 30 அக். 08 .
தமிழ் விடுதலைப்புலிகள், இராணுவ முகாமை விமானம் கொண்டு தாக்கியதாகச் செய்திகள் கூறுகின்றன
. இச் செவ்வாய்க் கிழமை இரவு தள்ளாடியிலுள்ள இராணுவ முகாமைத் தாக்கியதில் சிலர் இறந்ததாகவும்
, பலர் காயமுற்றதாகவும் இலங்கையின் குவார்டியன் செய்திச் சேவை கூறுகிறது. கெலானி திஸ்ஸாப்பகுதியில்
உள்ள மின் உற்பத்தி நிலையமும் தாக்கப்பட்டதாகவும் முன் எச்சரிக்கையாக அங்கு மின் சக்தி
நிறுத்தப்பட்டதால் அங்கு சிலர் காயமுற்றுள்ளனர் , வேறு பாதிப்புக்கள் இல்லை எனக் கூறப்படுகிறது
. இதுபற்றிக்கூறிய சமூக சேவகி சுகலா குமாரி விடுதலைப்புலிகள் தாக்குவதாக அறிவிக்கப்பட்டதும்
அங்கு மக்களிடையே உண்டான பீதி அளவு கடந்து இருந்தது . அப்படியென்றால் இலங்கையின் வடபகுதியில்
நடக்கும் இராணுவத்தின் தாக்குதலால் அங்குள்ள தமிழர் படும் வேதனையைக் கணிப்பது எப்படி
எனக் கேட்கிறார் .