இந்தோனேசியாவில் தீவிரவாதிகள் கிறிஸ்தவர்களைத் தாக்குதல் : 30 அக். 08.
இஸ்லாமியத் தீவிரவாதிகள் கிறிஸ்தவர்களையும் கிறிஸ்தவக் குருமார்களையும் குறிவைத்துத்
தாக்கி வருவதாகக் கூறப்படுகிறது. காவலர்கள் சில தீவிரவாதிகளைக் கைது செய்துள்ளனர் .தீவிரவாதிகள்
அவர்களுடைய தாக்குதல்களின் பாணியை மாற்றி வருவதாகக் கூறப்படுகிறது. அமெரிக்கா நிறுவியுள்ள
முக்கிய தொழில் நுட்பக் கூடங்களையும் இலக்கு வைத்துத் தாக்கிவருகின்றனர் . வட ஜகார்தாவின்
எண்ணைக் கிடங்குகளையும் தகர்க்கத் திட்டமிட்டுள்ளனர் . தீவிரவாதத்துக்கு எதிராக அமைதிப்
பேச்சுக்கு வழிவகுக்கும் திட்டங்களையும் முறியடிக்கத் திட்டமிட்டுள்ளதாக இந்தோனேசியாவின்
காவல்துறை உயர் அதிகாரி நாட்டப்பிரவீரா கூறியுள்ளார் .