2008-10-29 15:24:17

இரஷ்யாவில் இரு இயேசுசபைக் குருக்கள் கொல்லப்பட்டுள்ளனர்


அக்.29,2008 இரஷ்யாவில் பணியாற்றிக் கொண்டிருந்த இரு இயேசு சபைக் குருக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று திருப்பீட பத்திரிகைத் துறை அறிவித்தது.

மாஸ்கோவில் தங்கியிருந்த இயேசு சபைக் குருக்களான ஒட்டோ மெஸ்மெர், விக்டர் பெத்தான்கூர் ஆகியோரின் உயிரற்ற உடல்கள் நேற்று மாலை அவர்களின் தங்குமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக இரஷ்ய ஆயர் பேரவையின் பொதுச் செயலர் அருட்திரு இகோர் கோவால்ஸ்கி கூறினார்.

இறந்த குருக்கள் இருவரின் உடல்களிலும் எண்ணற்ற கத்திக்குத்து காயங்கள் இருந்ததாகவும் கொலையாளிகள் குறித்து காவல்துறை தீவிரமாக விசாரித்து வருவதாகவும் அவர் அறிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.