2008-10-28 15:05:30

பிரிட்டனில் மனிதவாழ்வு மேலும் சீரழிந்து வருகின்றது – தலத்திருச்சபை அதிகாரி ஒருவர்


அக்.28, 2008. பிரிட்டனில் மனிதக்கருவள ஆய்வு குறித்த மசோதா அங்கீகரிக்கப்பட்ட பின்னர் அந்நாட்டில் மனிதவாழ்வு இன்னும் சீரழிந்து வருகின்றது என்று கர்தினால் கெய்த் ஓ ப்ரைன் குறை கூறினார்.

பிரிட்டனில் கடந்த வாரத்தில் மனிதக்கருவள ஆய்வு குறித்த மசோதா அங்கீகரிக்கப்பட்டதையடுத்து பேட்டியளித்த ஸ்காட்லாண்ட் கர்தினால் கெய்த் ஓ ப்ரைன் இவ்வாறு தெரிவித்தார்.

மருத்துவ ஆராய்ச்சிக்காக மனித மற்றும் மிருகக் கருவை ஒன்றாக இணைத்து ஒரு புதிய உயிரை உருவாக்குவதற்கு இம்மசோதா அனுமதியளிக்கின்றது.

இதற்கிடையே இம்மசோதாவிற்கு எதிராய் ஓட்டளிக்குமாறு பிரிட்டன் கிறிஸ்தவ சபைத்தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது







All the contents on this site are copyrighted ©.