உலகில் இடம் பெறும் கொலைகளில் 10 விழுக்காடு பிரேசிலில் இடம் பெறுகின்றன
அக்.28, 2008. உலகில் இடம் பெறும் கொலைகளில் 10 விழுக்காடு பிரேசிலில் இடம் பெறும் வேளை,
அந்நாட்டுத் தலத்திருச்சபை கொலை செய்யாதே என்ற தலைப்பில் புதிய முயற்சி ஒன்றைத் தொடங்கத்
திட்டமிட்டுள்ளது.
பிரேசிலின் பெர்நாம்புக்கோ மாநிலத்தில் அதிகமாகக் கொலைகள் இடம்
பெறும் வேளை, ஒலின்டா மற்றும் ரெஷிப்பே உயர் மறைமாவட்டத்தில் ஞாயிறு திருப்பலிகளில் கொல்லப்பட்டவர்களின்
பெயர்களை வாசிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பெர்நாம்புக்கோ மாநிலத்தில்
கடந்த ஒன்பது மாதங்களில் 3093 பேரும் 1996க்கும் 2005க்கும் இடைப்பட்ட காலத்தில் ஏறத்தாழ
42 ஆயிரம் பேரும் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஊடகச் செய்திகள் கூறுகின்றன