தமிழ் கிறிஸ்தவப் பாடல்களின் குறுந்தகடு வெளியீடு . 27 அக்டோபர், 08.
கிறித்தவத் தமிழ் உலகில் புகழ்பெற்ற ஐந்து வல்லார்களின் கிறித்தவப் பாடல்களைக் கர்நாடக
இசையில் பிரபல பாடகர்களின் குரலில் மென்குறுந்தகடாக சென்னையின் தமிழ் மையம் வெளியிட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் தலைநகரிலிருந்து இயங்கும் வெரித்தாஸ் வானொலியின் முந்நாள் தமிழ்ப்பிரிவு
இயக்குநர் குரு. ஜெகத் கஸ்பாரினால் நடத்தப்படும் தமிழ் மையத்தால் கடந்த சனிக்கிழமை மாலை
வெளியிடப்பட்டது . கண்டேன் கண்குளிர என்ற இந்த இசைப் பெட்டகத்தில் வீரமாமுனிவர் , வேத
நாயகம் சாஸ்திரிகள் , வேதமாணிக்கம் , ஆபிரகாம் பண்டிதர் , அப்பாத்துரை ஆகியோரின் 5 பாடல்கள்
இடம் பெற்றுள்ளன . இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்
. சலேசியத் துறவறச் சபையின் சென்னை மாநிலத் தலைவர் அருள் தந்தை ஸ்தனிஸ்லாஸ் சாமிக்கண்ணு
தலைமை ஏற்க , பிரபலப் பின்னணிப் பாடகர் அருணா சாயிராம் இவ்விசைக் குறுந்தகட்டை வெளியிட்டிருக்கிறார்
. இதற்கு முன்னர் இத்தமிழ் மையம் திருவாசகம் , திருக்குறள் , ஆகியவைகளை இசையிலும் , இந்தியாவை
மோசார்ட் சந்திக்கிறார் , இந்தியக் கிறிஸ்துமஸ் என்ற இசைத் தகடுகளையும் வெளியிட்டுள்ளது.