2008-10-27 19:11:53

இலங்கையில் துன்புறும் தமிழ் மக்களுக்கு இந்திய அரசு உதவி. 27 அக். 08.


டெல்லியில் இந்திய அரசுக்கும் இலங்கையின் சிறப்பத்தூதுவர் பாசில் இராஜபக்சாவுக்கும் இடையே இடம் பெற்ற பேச்சு வார்த்தைகளைத் தொடர்ந்து உள்நாட்டுப் போரால் துன்புறும் தமிழர்களுக்கு உதவுவதற்கென 800 டன் உணவுப் பொருட்களை இந்திய அரசு தீர்மானித்துள்ளது. பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் உள்நாட்டுப் போரால் தங்கள் சொந்த நாட்டுக்குள்ளேயே அகதிகளாகியுள்ள நிலையில் இந்தியாவின் உணவு உதவியை இலங்கை ஏற்றுள்ளது , மக்கள்படும் துன்பங்களையும் தேவைகளையும் அது ஏற்றுக் கொள்வதாக உள்ளது என்கிறது ஒரு செய்தி நிறுவனம் . ஏற்கனவே போரிடும் பகுதிகளிலிருந்து தொண்டு நிறுவனப் பணியாளர்களை இலங்கை அரசு வெளியேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.