அகில உலக ஆயர்கள் மாமன்றத்தின் முடிவில் திருப்பலி .26 அக்டோபர். 08 .
இந்த ஞாயிறு காலை 9.30 மணிக்கு திருத்தந்தை தூய பேதுரு பசிலிக்காவில் தூய பேதுருவின்
கல்லறையின் மேலுள்ள திருப்பீடத்தில் திருப்பலி நிகழ்த்தினார் . மாமன்றத்துக்கு வந்திருந்த
ஆயர்களும், மற்றும் பலரும் திருப்பலியில் கலந்து கொண்டார்கள் . இத்திருப்பலி, அக்டோபர்
5 தேதியிலிருந்து 26 வரை நடந்து வந்த 12 ஆவது ஆயர்கள் மாமன்றத்தினை நிறைவு செய்தது .
வாழ்விலும் திருச்சபைப் பணியிலும் இறைவாக்கு என்ற தலைப்பில் மாமன்றத்தின் பொது அமர்வுகள்
நடந்தன . இன்றைய காலைத் திருப்பலியில் மாமன்றத்தில் பங்கேற்ற 326 உறுப்பினர்கள் பங்கேற்றனர்
. அதில் 52 பேர் கர்தினால்கள் . 14 பேர் கீழைத்திருச்சபைத் தலைவர்கள் . 45 பேர் பேராயர்கள்
. 130 பேர் ஆயர்கள். 85 பேர் பல்வேறு வழிகளில் மாமன்றத்துக்கு உதவியவர்கள் . திருத்தந்தை
தூய பேதுரு பசிலிக்கா திருப்பீடத்துக்கு வந்தபோது நீரே பேதுரு என்ற கீதம் பாடப்பட்டது.
திருப்பலியில் திருத்தந்தையோடு மாமன்றத்தின் தலைவர்கள் அருகிலிருந்தனர் . திருப்பலியின்
முடிவில் வானோர் இராக்கினியே என்ற கீதம் பாடப்பட்டது .