2008-10-25 15:34:00

இந்தியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகளை நிறுத்துவதற்கு ஆயர்கள் அரசை கானடா அரசை வலியுறுத்தல்


அக்.25,2008. இந்தியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகளை நிறுத்துவதற்கு இந்திய அரசை கானடா அரசு வலியுறுத்துமாறு கானடா ஆயர்கள் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பரை விண்ணப்பித்துள்ளனர்.

இந்தியாவில் இடம் பெறுவது சிறுபான்மையினர்க்கெதிரான கொடுமையான வன்முறை மட்டுமல்ல, தேசீயவாத தீவிரவாதப்போக்கும் தெரிகின்றது என்று கானடா ஆயர்கள் கூறினர்.

உலகில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட ஜனநாயக நாடு இந்தியா, இது காமன்வெல்த் நாடு என்ற வகையில் சிங்கப்பூர் சாசனத்தில் கையெழுத்திட்டுள்ளது, அதன்படி அந்நாடு மனிதரிடையேயான மற்றும் நாடுகளிடையேயான புரிந்து கொள்ளுதலை வளர்க்க வேண்டும், இனம், மதம், நிறம் என்ற பாகுபாடுகளை அகற்ற வேண்டும் என்று ஆயர்கள் மேலும் கூறினர்.








All the contents on this site are copyrighted ©.