திருத்தந்தையின் நூற்கள் அனைத்தும் விரைவில் அச்சேற்றப்படவுள்ளன . திருத்தந்தை எழுதிய
வழிபாடுகள் பற்றிய நூல் 2000 ஆம் ஆண்டில் வாதத்துக்கு வந்தது . அதுபோல இப்பொழுது சமயவாதம்
ஏதும் வராது எனத் திருத்தந்தை நம்புகிறார். சென்ற புதன்கிழமை 16 பிரிவுத் தொகுதிகளின்
முதல் தொகுதியாகிய , வழிபாடு பற்றிய நூல் , வெளியிடப்பட்டது. அதன் முகவுரையில் அவரது
நூற்கள் விவாதத்துக்கு வராது என நம்புவதாகத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை . திருத்தந்தையின்
பல்கலைக்கழக ஆண்டுகளிலிருந்து திருத்தந்தையாகப் பணியேற்ற காலம்வரை திருத்தந்தை எழுதிய
நூற்கள் வெளியிடப்பட உள்ளன. அவரது வழிபாடு பற்றிய நூல் வழிபாட்டை தெளிவுபடுத்தி அர்த்தமுள்ளதாக்குமென
நம்புவதாகவும் திருத்தந்தை மேலும் கூறினார் . வழிபாடு பற்றிய நூல் கடவுளுக்கு முக்கியத்துவம்
கொடுப்பதாகத் திருத்தந்தை கூறியுள்ளார் . எல்லாவற்றிற்கும் முதன்மையானவர் கடவுள் . அவரை
நாம் கண்டுகொள்ள வில்லையென்றால் , உலகில் உள்ள அனைத்தும் தொடர்பை இழந்துவிடும் எனத் திருத்தந்தை
அவரது நூலின் முகவுரையில் கூறியுள்ளார் .